குவைத்தில் இஸ்லாமிய வாழ்வியல் சிறப்பு நிகழ்ச்சி / “Islamic Lifeology” Seminar by K-Tic

5:01 AM Posted In , , , , , , , Edit This 0 Comments »
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த இஸ்லாமிய வாழ்வியல் சிறப்பு நிகழ்ச்சி!

கடந்த 18.06.2010 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து இரவு 10:00 மணி வரை குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில்)' பள்ளிவாசலில் குவைத் இந்திய தூதரகம், குவைத் மஸ்ஜித் கபீர் நிர்வாகம் மற்றும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றில் பதிவு பெற்ற ஒரே தமிழ் இஸ்லாமிய அமைப்பான 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்த 'இஸ்லாமிய வாழ்வியல் சிறப்பு நிகழ்ச்சி' சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...சங்கத்தின் செயல் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை இளவல் எஸ். அல் அமீன், திருமறை அல்-குர்ஆன் வசனங்களை கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர், வரவேற்புரையாற்ற, சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க நிகழ்ச்சி இனிதே துவங்கியது.இச்சிறப்புமிகு வாழ்வியல் நிகழ்ச்சியில் சங்கத்தின் ஃபத்வா குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்கள், 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற தலைப்பில் சிறப்புரையாற் றினார். இவர்கள் தமது உரையில், வாழ்வியல் வழிகாட்டல், இஸ்லாம் காட்டும் நெறிமுறைகள், சோதனைகள் ஏற்பட்டால் எதிர்கொள்ளும் வழிமுறைகள் போன்றவற்றை தெளிவாக ஆதாரங்களுடன் குறிப்பிட்டார்கள்.இவர்களைத் தொடர்ந்து சங்கத்தின் கொள்கை பரப்புக் குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ அவர்கள், 'வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். இவர்கள் தமது உரையில், குழந்தை வளர்ப்பு, இளைய சமுதாயத்திற்கான நல்லொழுக்க பயிற்சிகள், குடும்ப வாழ்க்கை முறை போன்றவற்றை விளக்கமாக ஆதாரங்களுடன் குறிப்பிட்டார்கள்.சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்ற, சங்கத்தின் ஜமாஅத்துல் உலமா குழு மூத்த உறுப்பினர் மௌலவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ, துஆ ஓத நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்து லில்லாஹ்...

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் பலர் பங்கேற்று பயனடைந்தனர். பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இரவு சிற்றுண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கு சங்கத்தின் துரித சேவை அலைபேசி எண் (+965) 97872482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும், மேலதிக செய்திகளுக்கும், நிகழ்ச்சியின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.


“Islamic Lifeology” Seminar in Tamil Conducted by “Kuwait Tamil Islamic Committee (K-Tic)”

Kuwait Tamil Islamic Committee (K-Tic), a non-profit socio welfare organization of Tamil speaking Muslim community in Kuwait, (established in 2006 - registered with Indian Embassy of Kuwait and also with Administration of Grand Mosque, Kuwait Ministry of Awqaf and Islamic Affairs).

K-Tic has a impressive name among the socio-welfare organizations in Kuwait and Gulf countries whose benevolent works and enlightening activities and conserving Islamic uniqueness and also well known with the thousands of Indians especially all Tamil speaking people in Kuwait.

Apart from several Special Annual events, K-Tic conducts monthly programs. This month’s program was titled as “Seminar on Islamic Lifeology” and presented at Masjid Al-Shayaa (Near KPTC Bus Terminal & Adjusant Liberation Tower / Souk Al-Wathaniyaa), Mirqab, Kuwait City, which started @ 6:30 pm (after Maghrib Prayer) up to 10:00 pm on June 18, 2010 Friday.

The seminar presided by Moulavi Ash-Shaikh M.S. Mohammed Meera Shah Fazil Baqavi (Acting President) and started with recital / Qira'th from Holy Al-Qur'an by Master S. Al-Ameen, followed by the welcome speech by Al-Haaj A.K.S. Abdul Nazar (Deputy General Secretary), anchored by Moulavee Afzalul Ulamaa Ash-Shaikh A.B. Khaleel Ahmed Baaqavee M.A., (General Secretary).The Islamic Lifeology - detailed in two major topics covered by two scholars – Moulavi Hafiz Qari Ash-Shaikh M. Mohamamed Nizamudh Deen Baqavi (Senior Member, Fatwa Wing) and Moulavi Qari Ash-Shaikh M. Zainul Aabideen Baqavi (Senior Member, Islamic Scholars (Ulamaa) Wing).

Their lecture covered guidance for life in light of Al Quran and Hadiths, how Islam teaches to tackle the problems at the time of depressions, how to teach the children good habits so that their future shall prosper.

The meeting was attended from Tamil speaking community and was beneficent for them and their families. The seminar concluded with vote of thanks by Al-Haaj H. Mohammed Naasar (Deputy Treasurer) and Dua’a by Moulavi Hafiz Qari Ash-Shaikh A.R. Mohamamed Ibraheem Manbayi (Senior Member, Scholars (Jama'athul Ulamaa) Wing). A small supper was arranged and separate area for ladies was also arranged.For more details please contact to K-Tic's Hotline (+965) 97872482, for more Tamil and English News and Event Photos… please visit our official website: www.k-tic.com, for sending your valuables suggestions please mail to: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com, for joining the Yahoo Group: http://groups.yahoo.com/group/K-Tic-group

Hotline : (+965) 97 87 24 82
Emails: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
Official Website: www.k-tic.com
Yahoo Group: http: //groups.yahoo.com/group/K-Tic-group

இஸ்லாமிய வாழ்வியல் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!

12:47 AM Posted In , , , , , , Edit This 0 Comments »
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18.06.2010 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில்)' பள்ளிவாசலில் குவைத் இந்திய தூதரகம், குவைத் மஸ்ஜித் கபீர் நிர்வாகம் மற்றும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றில் பதிவு பெற்ற ஒரே தமிழ் இஸ்லாமிய அமைப்பான 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்யும் 'இஸ்லாமிய வாழ்வியல் சிறப்பு நிகழ்ச்சி' முதல் முறையாக நடைபெற இருக்கின்றது.

இச்சிறப்புமிகு வாழ்வியல் நிகழ்ச்சியில் சங்கத்தின் கொள்கை பரப்புக் குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ அவர்கள் 'வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்' என்ற தலைப்பிலும், சங்கத்தின் ஃபத்வா குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்கள் 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

சங்கத்தின் செயல் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில், சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இரவு சிற்றுண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவையின் 5ஆம் ஆண்டு துவக்க விழா! புதிய நிர்வாகிகள் தேர்வு!!

12:41 AM Posted In , , , , , , Edit This 0 Comments »
கடந்த 11.06.2010 வெள்ளிக்கிழமை மாலை 3:00 மணியளவில் குவைத், ஸால்மியா பகுதியில் உள்ள பேரவையின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜனாப் B.A அப்துர் ரஜ்ஜாக் அவர்களின் இல்லத்தில் குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவையின் '5ஆம் ஆண்டு துவக்க விழா'வும், '2010-2011ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு'ம் நடைபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்...

பேரவையின் ஆலோசனை குழு உறுப்பினர் ஜனாப் S. முஹம்மது நூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேரவையின் தலைவர் ஜனாப் J. ஹஸன் அலீ மற்றும் செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஆகியோர் முன்னிலை வகிக்க, ஆலோசனை குழு உறுப்பினர் ஜனாப் N. ஸுல்தான் ஆரிஃப் இறைவசனங்கள் (கிராஅத்) ஓத நிகழ்ச்சிகள் இனிதே துவங்கின.

தலைவரின் தலைமையுரைக்கு பின், செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். துணைச்செயலாளர் ஜனாப் மீ.மெ. ஹாஜா கமால் பேரவையின் நோக்கங்கள், செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார். பொருளாளர் ஹாஜி M.S குலாம் ஜெய்லானி மியான் ஆண்டு வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.

4ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 5ம் ஆண்டு துவக்கம் குறித்து உறுப்பினர்களின் கலந்துரையாடலுக்கு பிறகு 2010-2011ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. கீழ்க்காணும் சகோதரர்கள் பேரவையின் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

நிர்வாகக் குழு

தலைவர் :ஹாஜி M.S. குலாம் ஜெய்லானி மியான்


கௌரவ தலைவர் : மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ

துணைத் தலைவர்கள் : 1. ஜனாப் S. முஹம்மது நூர் 2. ஜனாப் K. முஹம்மது இப்ராஹீம் (ஃபதஹ் நானா)

செயலாளர்: ஜனாப் மீ.மெ. ஹாஜா கமால்


இணைச்செயலாளர் : ஜனாப் N. ஸுல்தான் ஆரிஃப்

துணைச்செயலாளர்கள் : ஜனாப் U. நிஸார் அஹ்மது 2. ஜனாப் S. ஸலாஹுத்தீன்

பொருளாளர் : ஜனாப் S. கவுஸ் அலீ


துணைப் பொருளாளர் : ஜனாப் B.A. அப்துர் ரஜ்ஜாக்

ஊடகத்துறை பொறுப்பாளர் : மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ


மக்கள் தொடர்பு : ஜனாப் N. ஸுல்தான் ஆரிஃப்
ஆலோசனைக் குழு

தலைவர் : ஜனாப் J. ஹஸன் அலீ


உறுப்பினர்கள்: 1. ஜனாப் Z. ஹபீபுல்லாஹ் மரைக்காயர் 2. ஜனாப் B. முஹம்மது ஷரீஃப் 3. ஜனாப் A.B. அப்துல் நஜீர் 4. ஜனாப் M.H. அல்காஃப் ஹுஸைன் 5. ஜனாப் K. ஜாகிர் ஹுஸைன்

செயற்குழு


தலைவர் : ஜனாப் N. வஜ்ஹுத்தீன்
உறுப்பினர்கள் : 1. ஜனாப் S. இமாம் கஜ்ஜாலி 2. ஜனாப் M.H. உஜைர் 3. ஜனாப் I. முஸ்தஃபா 4. ஜனாப் S. ஷர்ஃபுத்தீன் 5. ஜனாப் S.A. பீர் முஹம்மது
புதிய பொருளாளர் ஜனாப் S. கவுஸ் அலீ நன்றியுரையாற்ற, கௌரவ தலைவரின் துஆவுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன. இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டு தங்கள் வருகையை பதிவுசெய்து சிறப்பித்ததுடன் நகர வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் பேரவை எடுக்கும் முயற்சிகளுக்குஉதவியும் ஒத்துழைப்பும் வழங்குவதாக உறுதியளித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை(KPIA)யின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

மேலதிக செய்திகளுக்கும், பேரவையின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும், தங்களின் கருத்துக்கள், ஆலோசனைகளை அனுப்புவதற்கும் kwt_pno_islam@yahoo.co.in / kwt.pno.islam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறும், குவைத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் பேரவையின் குழுமத்தில் இணைந்திடுமாறும் பேரவையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : ஊடகத் துறை, குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA), குவைத்


அலைபேசி எண்கள்:(+965) 66 36 26 47 / 97 87 24 82 / 66 64 14 34 / 67 78 97 84
மின்னஞ்சல்கள் : kwt_pno_islam@yahoo.co.in / kwt.pno.islam@gmail.com
குழுமம் : http://groups.google.com/group/kpia
KPIA பேரவையின் செயற்திட்டங்கள்

அ) பரங்கிப்பேட்டைக்கான சேவைகள்:


1. கல்வி உதவி (உயர் கல்வி மற்றும் கம்ப்யூட்டர் கல்வி)!


2. கத்னா (சுன்னத்) செய்ய உதவி!
3. ஜனாஸா அடக்கம் செய்ய உதவி!
4. ஆதவற்ற குடும்பங்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் முறையில் தொழில் தொடங்க உதவி!
5. வருமானமில்லா பள்ளிவாசல்களில் ரமழான் நோன்பு கஞ்சி காய்ச்ச உதவி!
6. ஜகாத் (ஏழைவரி), ஸதகத்துல் ஃபித்ர் (பெருநாள் தர்மம்) மற்றும் ஸதகா (தர்மம்) போன்றவற்றை இங்கு வசூலித்து ஊரிலுள்ள தகுதியுள்ளோருக்கு விநியோகித்தல்!
7. இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இயன்றவரை உதவி செய்தல்! 8. மற்ற வளைகுடா நாடுகளில் இயங்கிவரும் நமதூர் அமைப்புகளுடன் இணைந்து வேலையில்லாத நமதூர் சகோதரர்களுக்கு வேலை பெற்று தர ஏற்பாடு செய்தல்!
9. நமதூரில் செயல்பட்டு கொண்டிருக்கும் நற்பணி அமைப்புகளுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம், கல்வி விழிப்புணர்வு முகாம், இலவச தண்ணீர் பந்தல், பேரூந்து & தொடர்வண்டி (இரயில்) கால அட்டவணை தகவல் பலகை, சாலையோரம் மரங்கள் நடுதல், கோடைகால பயிற்சி வகுப்பு, இலவச கம்ப்யூட்டர் கல்வி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் உதவி தொகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நமதூருக்குத் தேவையான அவசியமான அத்தியாவசியமான பணிகள் குறித்த கலந்தாய்வு போன்றவற்றை ஏற்பாடு செய்தல்!
ஆ) குவைத்திற்கான சேவைகள்:

1. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது!


2. ஊரிலிருந்து வரும் தபால்களை ஒப்படைப்பதற்கான உள்ளூர் தபால் சேவை!
3. ஆண்டுக்கொருமுறை பேரவை சார்பாக குவைத்திலிருந்து புனித உம்ரா பயணம் புறப்படுதல்!
4. உறுப்பினர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம் ஏற்பாடு செய்தல்!
5. நமதூர் மக்களுக்கான பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்துதல்!

இன்னும் உண்டு பல நல்ல செயற்திட்டங்கள்...!


இன்ஷா அல்லாஹ்... அவற்றை செயல்படுத்த வேண்டும்..!!
தங்களின் மேலான பிரார்த்தனைகள், உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகள்...!!!

மீராப்பள்ளியில் நடைபெறும் முப்பெரும் விழா!

12:22 AM Edit This 0 Comments »
பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரியில் 12ந் தேதி சனிக்கிழமையன்று தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி காலை 9.00 மணி முதல் இஷா வரை நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அரபுக்கல்லூரிகள் மற்றும் ஹிஃப்ழு மதரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் 100க்கும் பேம்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்தனர்.

இரண்டாம் நாளாகிய இன்றும் (13.06.2010 ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி முதல் லுஹர் வரை உலக அளவிலும், அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்ட கிராஅத் போட்டிகளில் பல பரிசுகளை வென்ற தலை சிறந்த காரீகளின் (காரீ: முறையாக திருக்குர்ஆனை ஓதக்கூடியவர்) மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம் முதல் முறையாக நடைபெற்றது.

அந்நிகழ்வுகளின் சில புகைப்படங்கள் இதோ தங்களின் பார்வைக்கு...

விரிவான செய்திகள் செய்திகள் இன்ஷா அல்லாஹ் விரைவில்...

புகைப்படங்கள் உதவி: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் குழுமம்





ஏழை மாணவிகள் உயர் கல்வி கற்க உதவிடுவீர்!

5:17 AM Posted In , , , Edit This 0 Comments »
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

கல்வி உதவி வேண்டி விண்ணப்பம்

அனுப்புநர்:

S. நூர் முஹம்மது (டைலர்),
197/4 மேலாண்ட வீதி, C.N. பாளையம் - 607102, கடலூர் மாவட்டம்.
அலைபேசி எண்: (+91) 9786453164

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு...! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

நம் அனைவரின் மீதும் அந்த ஓரிறைவனின் சாந்தியும், சமாதானமும் நிகழட்டுமாக! ஆமீன்!! நலம்! நலமறிய ஆவல்!! நிற்க...

S. நூர் முஹம்மது ஆகிய நான் கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் மற்றும் நடுவீரப்பட்டு அருகிலுள்ள C.N. பாளையம் என்ற கிராமத்தில் மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வருகின்றேன். அதே கிராமத்தில் பல்லாண்டுகளாக சொந்தமாக தையல் தொழிலையும் செய்து வருகின்றேன். நாளொன்றுக்கு வருமானம் ரூ. 75லிருந்து ரூ. 150 வரை மட்டுமே கிடைக்கும். விஷேச காலங்களில் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும். அல்லாஹ்வின் அருளால் இந்த குறைந்த வருமானத்தில்தான் என் மனைவி மக்களை காப்பாற்றி வருகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்...

என் பிள்ளைகளில் மூத்த மகள் யாஸ்மின் தற்போது திருச்சியிலுள்ள ஒரு மகளிர் கல்லூரியில் BCA படிப்பில் மூன்றாம் வருடமும், இளைய மகள் சுமைய்யா அதே கல்லூரியில் B.Sc., (Nutrition & Dietetics) படிப்பில் இரண்டாம் வருடமும் சேருவதற்கு தயாராக இருக்கின்றனர்.

மகனார் முஹம்மது அனஸ் பத்தாவது முடித்து விட்டு மார்க்கக் கல்வியுடன் இணைந்த படிப்பை கீழக்கரையில் உள்ள புகழ்ப் பெற்ற கல்லூரியில் படித்து வருகின்றார்.

இது வரையும் என் பிள்ளைகளை அல்லாஹ்வின் பேரருளால் மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்தேன். ஆனால், தற்போது மேலும் படிக்க வேண்டும் என்று பிள்ளைகள் விரும்புகிறார்கள். என் சூழ்நிலையில் அவர்களின் கனவை நிறைவேத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

காரணம், மூத்த மகள் யாஸ்மின் படிப்பு செலவுக்காக கடந்த இரண்டு வருடங்களாக கல்வி கட்டணம் சுமார் 22,000 - விடுதி கட்டணம் சுமார் 12,000 - உணவு கட்டணம் சுமார் 15,000 - கல்லூரியின் இதரச் செலவுகள் சுமார் 5,000 - பயணச் செலவு சுமார் 10,000 மற்றும் பிள்ளைக்குத் தேவையான செலவுகள் சுமார் 5,000 என ஏறக்குறைய 69,000 ரூபாய்களும்), என் இளைய மகள் சுமைய்யா படிப்பு செலவுக்காக கடந்த வருடம் கல்வி கட்டணம் சுமார் 11,000 - விடுதி கட்டணம் சுமார் 6,000 - உணவு கட்டணம் சுமார் 7,000 - கல்லூரியின் இதரச் செலவுகள் சுமார் 2,000 - பயணச் செலவு சுமார் 5,000 மற்றும் பிள்ளைக்குத் தேவையான செலவுகள் சுமார் 2,000 என ஏறக்குறைய 33,000 ரூபாய்களும் ஆக மொத்தம் 1,02,000 (ஒரு இலட்சத்து இரண்டாயிரம்) ரூபாய்கள் வரை செலவு செய்து படிக்க வைத்துள்ளேன்.

படிக்காத தலைமுறையில் பிறந்த என் பிள்ளைகள் படித்தவர்களாக, அடுத்தவருக்கு வழிகாட்டுபவராக திகழ வேண்டும் என்ற ஆசையிலும், என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும், நாம் சிரமபட்டாலும் பரவாயில்லை, என் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும்தான் தெரிந்த நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கியும், என் வேண்டுகோளை ஏற்று அவ்வப்போது உதவிகளை அனுப்பி வைத்த சகோதரர்கள் வாயிலாகவும் இந்த செலவுகளை செய்தேன்.

நான் கேட்ட உறவு முறைகளில் எனக்கு எந்தவொரு உதவியும் கிடைக்க வில்லை. என் குடும்ப உறவினர்களும் வசதியானவர்களாக இல்லை. கல்லூரி மூலமாக கல்வி உதவித்தொகையும் கிடைக்க வில்லை.

கடந்த வருடம் இதுபோன்று கோரிக்கை வைத்தவுடன் என் பிள்ளைகளின் படிப்புக்கு சிலர் உதவி செய்தனர். அவர்கள் அனைவருக்கும் இந்த மடல் வாயிலாக நன்றிகளையும், துஆக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த சூழ்நிலையில் மூத்த மகள் யாஸ்மின் மூன்றாம் ஆண்டு படிப்புக்கு செல்ல வேண்டும். இளைய மகள் சுமைய்யா இரண்டாம் ஆண்டு படிப்பிற்கு செல்ல வேண்டும். இதற்காக குறைந்த பட்சம் இவ் வருடத்திற்கு மட்டும் எல்லா செலவுகளையும் சேர்த்து சுமார் 70,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது.

கடந்த வருடங்களில் செய்த செலவின் கடனே இன்னும் முடிவடையாத சூழலில் இப்போது என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக மேலும் கடன் வாங்க முடியாத நிலை.

அதனால்தான்... அல்லாஹ்விற்காக... என் பெண் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை கவனத்தில் கொண்டு சகோதர சகோதரிகளான தாங்கள்...

1. தங்களால் முடிந்த உதவிகள் செய்திடுமாறு (அல்லது)
2. கல்வி உதவித் தொகை கிடைக்குமிடங்களில் என் பிள்ளைகளின் பெயர்களை சேர்த்து விடுமாறு (அல்லது)
3. தங்களுக்கு தெரிந்த அமைப்புகள், நண்பர்கள் ஆகியோரிடம் என் பிள்ளைகளின் நிலைகளை எடுத்துச் சொல்லி உதவி புரியுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

என் பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக வரக்கூடிய உதவிகள் அனைத்தையும் இன்ஷா அல்லாஹ் அதற்காக மட்டும்தான் பயன்படுத்துவேன் என்றும், அதன் சார்பாக வாங்கப்பட்ட கடன்களை மட்டும்தான் அடைப்பேன் என்றும், மேலதிக உதவிகள் வந்து விட்டால் அவற்றை என் பிள்ளைகள் போன்று கல்வி கற்க வசதியில்லாத பிள்ளைகளுக்கு அளித்து உதவி செய்வேன் என்றும் இந்த மடல் மூலம் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உறுதியளிக்கின்றேன்.

இந்த கோரிக்கை அல்லாஹ், ரசூலுக்காக தாங்கள் ஏற்று, என் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இத்துடன் ஊர் ஜமாஅத் கடிதத்தையும், கல்லூரியின் நற்சான்றிதழ்களையும் இணைத்துள்ளேன்.




எல்லா வல்ல அல்லாஹ் நற்காரியங்கள் பல செய்யும் தங்கள் அனைவருக்கும் இம்மை மறுமை இரண்டிலும் நற்பாக்கியங்களை வழங்க வேண்டும் எனவும் துஆ செய்கின்றேன். நன்றி. வஸ்ஸலாம்.

இப்படிக்கு,

தங்களின் உதவிகளை அன்புடன் எதிர்பார்க்கும் சகோதரன்...
எஸ். நூர் முஹம்மது (டைலர்)

என் வங்கி கணக்கு விபரங்கள் (Bank Account Details):
S. Noor Mohamed,
A/C # 6655, Indian Overseas Bank,
Naduveerapattu Branch (280),
Cuddalore District, Pin code – 607102.
Mobile: (+91) 9786453164

பரங்கிப்பேட்டை மாநகரில் முப்பெரும் விழா!

11:18 PM Posted In , , , , , Edit This 0 Comments »
ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா!
தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி!!

மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம்!!!


பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரியில் இந்த மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் முப்பெரும் விழா நடைபெற இருக்கின்றது இன்ஷா அல்லாஹ்....

12ந் தேதி சனிக்கிழமையன்று தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி காலை 9.00 மணி முதல் இஷா வரை நடைபெற இருக்கின்றது.

இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அரபுக்கல்லூரிகள் மற்றும் ஹிஃப்ழு மதரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபிக்க இருக்கின்றனர்.

இரண்டாம் நாள் 13 ந் தேதி (13.06.2010) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் லுஹர் வரை உலக அளவிலும், அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்ட கிராஅத் போட்டிகளில் பல பரிசுகளை வென்ற தலை சிறந்த காரீகளின் (காரீ: முறையாக திருக்குர்ஆனை ஓதக்கூடியவர்) மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம் முதல் முறையாக நடைபெற இருக்கின்றது.

பிற்பகல் 1:30 மணி முதல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரியில் திருக்குர்ஆனை முறையாக முழுவதுமாக மனனம் செய்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஹாஃபிழ் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கிராஅத் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.

மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் பெற்றுக் கொள்ளலாம்.








அல்லாஹ்வின் அருள்மறையை, அவனிக்கு வழிகாட்ட வந்த திருமறையை தேனினும் இனிய குரல்களில், உள்ளங்கள் உருகும் வகையில், நம்மை மெய்ச சிலிர்க்கும் முறையில் செவிகள் குளிர ஓதிக்காட்டப்படும் இந்த மாபெரும் கிராஅத் அரங்கிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அல்லாஹ்வின் அருள்மழையில் நனைய வேண்டும் என்றும் போட்டிகளில் பங்குபெறும மாணவச் செல்வங்களின் திறமைகளை நேரில் காணவும், ஹாஃபிழ் பட்டம் பெறும் மாணவர்களுக்கு துஆ செய்யவும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி மற்றும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரி நிர்வாகிகள் அழைப்பு விடுக்கின்றனர்.

இந்த அழைப்பை தமிழறிந்த அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

தொடர்புக்கு:

முதல்வர்,
அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரி,
ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி,
மீராப்பள்ளித் தெரு, பரங்கிப்பேட்டை - 608502,
கடலூர் மாவட்டம்.
தொலைபேசி: (04144) 25 33 11

சென்னையில் தஜ்வீதுல் குர்ஆன் பயிற்சி பெற்ற ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

1:27 AM Posted In , , , , , , Edit This 0 Comments »