மீராப்பள்ளியில் நடைபெறும் முப்பெரும் விழா!

12:22 AM Edit This 0 Comments »
பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரியில் 12ந் தேதி சனிக்கிழமையன்று தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி காலை 9.00 மணி முதல் இஷா வரை நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அரபுக்கல்லூரிகள் மற்றும் ஹிஃப்ழு மதரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் 100க்கும் பேம்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்தனர்.

இரண்டாம் நாளாகிய இன்றும் (13.06.2010 ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி முதல் லுஹர் வரை உலக அளவிலும், அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்ட கிராஅத் போட்டிகளில் பல பரிசுகளை வென்ற தலை சிறந்த காரீகளின் (காரீ: முறையாக திருக்குர்ஆனை ஓதக்கூடியவர்) மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம் முதல் முறையாக நடைபெற்றது.

அந்நிகழ்வுகளின் சில புகைப்படங்கள் இதோ தங்களின் பார்வைக்கு...

விரிவான செய்திகள் செய்திகள் இன்ஷா அல்லாஹ் விரைவில்...

புகைப்படங்கள் உதவி: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் குழுமம்





0 comments: